தமிழ்நாடு செய்திகள்

மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகரும் மாண்டஸ் புயல்

Published On 2022-12-09 18:50 IST   |   Update On 2022-12-09 18:50:00 IST
  • சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
  • கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

சென்னை

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 14 கி.மீ. தூரம் நகர்ந்து வருவதாக வானிலை மையம் கூறி உள்ளது.

மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. ஆங்காங்கே மெட்ரோ ரெயில் பணிகளும் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இதேபோல் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. 

Tags:    

Similar News