டென்னிஸ்

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: 2வது சுற்றிலும் போபண்ணா ஜோடி வெற்றி

Published On 2025-04-10 05:04 IST   |   Update On 2025-04-10 05:04:00 IST
  • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
  • இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

மாண்டே கார்லோ:

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சிமொனே பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடியுடன் மோதியது.

இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களை7-6 (7-4), 10-7 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News