விளையாட்டு

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி 5வது வெற்றியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ்

Published On 2025-10-04 01:07 IST   |   Update On 2025-10-04 01:07:00 IST
  • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
  • அரியானா ஸ்டீலர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.

சென்னை:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிரமபட்டனர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர்கள் அதன்பின் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 45-33 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Tags:    

Similar News