விளையாட்டு

விக்டர் மோங்கில் 

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஓடிசா முன்னாள் கேப்டனை ஒப்பந்தம் செய்தது கேரளா பிளாஸ்டர்ஸ்

Published On 2022-07-13 12:37 GMT   |   Update On 2022-07-13 12:37 GMT
  • விக்டர் மோங்கில் இதற்கு முன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்தார்.
  • மேலும் விக்டர் மோங்கில் ஸ்பெயினை சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் பி போன்ற பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

சென்னை:

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அணி கிரேக்க-ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்போஸ் டோலோஸ் கியானோவை ஒப்பந்தம் செய்தது. இவர் கவாலா, எத்னிகோஸ் போன்ற பல கிரேக்க முதல்-பிரிவு அணிகளுக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தவர்.

இந்த நிலையில் தற்போது அந்த அணி ஸ்பெயின் வீரர் விக்டர் மோங்கிலை ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இவர் இதற்கு முன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்தார்.

மேலும் இவர் ஸ்பெயினை சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் பி போன்ற பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News