விளையாட்டு

காமன்வெல்த் பெண்கள் கிரிக்கெட்: அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதல்

Published On 2022-08-05 11:17 IST   |   Update On 2022-08-05 11:17:00 IST
  • காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
  • முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன.

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி யில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியது.

இதையடுத்து அரை இறுதியில் யார்-யாருடன் மோதுவது என்பது உறுதியானது. முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன. 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு ஆட்டங்களும் நாளை நடக்கிறது.

Tags:    

Similar News