விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: வெண்கலம் வென்றது இந்திய ஓபன் பி அணி

Published On 2022-08-09 09:52 GMT   |   Update On 2022-08-09 09:52 GMT
  • 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் ‘பி’ அணி ஜெர்மனியை எதிர் கொண்டது.
  • கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது.

சென்னை:

சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் 'பி' அணி ஜெர்மனியை எதிர் கொண்டது.

இந்த போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது. 

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. அர்மீனியா அணி 19 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

Tags:    

Similar News