விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2023-08-03 22:05 GMT   |   Update On 2023-08-03 22:05 GMT
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

சிட்னி:

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-10, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சு லி யாங்கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 19-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சி யூ ஜென்னை வீழ்த்தி காலிறுதியை எட்டினார்.

இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை விரட்டியடித்தார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-10 என்ற நேர்செட்டில், சக நாட்டு வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்பை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News