கிரிக்கெட் (Cricket)
null

இது எங்க சொந்த மைதானம்.. இந்தியாவுக்கு சவால் விடுத்த UAE கேப்டன்

Published On 2025-09-10 12:41 IST   |   Update On 2025-09-10 12:48:00 IST
  • துபாயில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இன்று மோதுகிறது.
  • இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம்.

துபாய்:

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

போட்டியின் 2-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 2-வது லீக்கில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை (ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி) சந்தித்துள்ளது. அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வசீம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

எல்லா அணிகளும் சிறப்பாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை ஒரு பெரிய போட்டியா நாங்க கருத மாட்டோம். அதனால எல்லா போட்டிகளும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஆனால் எங்கள் திட்டப்படி கடின உழைப்பை செலுத்துவோம். நாம் என்ன கற்றுக்கொண்டோமோ அதன்படி செல்வோம். முடிவு ஆட்டத்தைப் பொறுத்தது.

நாங்க இங்க நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் இங்க நிறைய விளையாடுதுன்னு சொல்லலாம். ஆனா இது எங்க சொந்த மைதானம். அதனால நாங்க முடிந்தவரை நல்ல கிரிக்கெட் விளையாட முயற்சிப்போம்.

என கூறினார்.

Tags:    

Similar News