கிரிக்கெட் (Cricket)
null

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் விலகல்?

Published On 2025-08-21 09:42 IST   |   Update On 2025-08-21 11:07:00 IST
  • டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார்.
  • அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரோகித் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை:

இந்திய கிரிகெட் அணியின் 3 நிலைக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றதோடு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வானார். ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அதே நேரத்தில் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு மீண்டும் திரும்பினார். அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு ஒருநாள் போட்டி கேப்டன் பதவியை கொடுத்து நீண்ட காலம் அவரை அந்த பொறுப்பில் அமர்த்த பி.சி. சி.ஐ. முடிவு செய்கிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க அனுமதிக்கப்படும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவர்களது கடைசி போட்டியாக இருக்கும். இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

Tags:    

Similar News