பும்ரா இல்லை.. அவர் வேற லெவல்.. இந்திய பந்து வீச்சாளரை புகழ்ந்த வாசிம் அக்ரம்
- இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
- முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர்.
இந்த தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.
அதிலும் குறிப்பாக பும்ராவைத் தவிர்த்து, முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடைசி நாளில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அது நம்ப முடியாத முயற்சி. 186 ஓவர்கள் பந்து வீசிய பிறகும், கடைசி நாளில் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துவது சிராஜின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தின் அறிகுறியாகும் என்று பாராட்டியுள்ளார்.
பணிச்சுமை மேலாண்மை காரணமாக இறுதித் தேர்வில் பும்ரா பங்கேற்கவில்லை என்று பல இடங்களில் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.