விளையாட்டு
சிஎஸ்கே அணி

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஆடம் மில்னே விலகல்

Published On 2022-04-22 04:35 IST   |   Update On 2022-04-22 04:35:00 IST
ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம் பெற்றிருந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் தசைப்பிடிப்பு காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் ஆடம் மில்னே விலகியுள்ளார். 

சிஎஸ்கே அணியில் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டு உள்ளார்.

Similar News