விளையாட்டு
ரோகித் சர்மா

அதிக முறை டக் அவுட் - ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் மோசமான சாதனை

Published On 2022-04-21 20:56 GMT   |   Update On 2022-04-21 20:56 GMT
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் சென்னை அணியின் சார்பில் பந்து வீசிய முகேஷ் சவுத்ரி 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மும்பை:

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதின. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. 
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார்.

இது ஐ.பி.எல். போட்டிகளில் ரோகித் சர்மாவின் 14-வது டக் அவுட்டாகும். இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

Tags:    

Similar News