விளையாட்டு
வலுதூக்குதல் போட்டி

சென்னை மாவட்ட வலுதூக்குதல் போட்டி - 300 பேர் பங்கேற்பு

Published On 2022-03-03 12:32 IST   |   Update On 2022-03-03 12:32:00 IST
சென்னை மாவட்ட வலுதூக்குதல் சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர் மாஸ்டர்ஸ் பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில் 300 பேர் பங்கேற்றனர்.
சென்னை:

சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்கம் மற்றும் மெர்வின் பிட்னஸ் மையம் சார்பில் சென்னை மாவட்ட பெஞ்ச் பிரஸ் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி வில்லிவாக்கத்தில் நடந்தது.

சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர் மாஸ்டர்ஸ் பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். இதில் மேக்ஸ்ஜிம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பட்டத்தை பெற்றது.மெர்வின் பிட்னஸ் மையம் 2-வது இடத்தையும், ஆக்சி ஜென் ஜிம் 3-வது இடத்தை பிடித்தது.

Similar News