செய்திகள்
இந்திய வீரர் சதீஷ்குமார்

டோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தோல்வி

Published On 2021-08-01 04:55 GMT   |   Update On 2021-08-01 04:55 GMT
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை ஆண்கள் சூப்பர் ஹெவிவெயிட் 91 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய வீரர் சதீஷ்குமார் தோல்வியடைந்தார்.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று குத்துச்சண்டை ஆண்கள் சூப்பர் ஹெவிவெயிட் 91 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதி போட்டிக்கள் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் சதீஷ்குமார் பங்கேற்றார். அவர் உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் ஜலோலோவை எதிர்கொண்டார்.

போட்டி துவங்கியது முதலே உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் ஆதிக்கம் செலுத்தினார். அவர் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றார். பஹதீர் போட்டியின் அனைத்து சுற்றுகளையும் கைப்பற்றினார். ஆனால், இந்திய வீரர் சதீஷால் ஒரு சுற்றைக்கூட கைப்பற்ற முடியவில்லை. இதனால், இந்திய வீரர் சதீஷை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் பஹதீர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறினார். 
Tags:    

Similar News