செய்திகள்
கோப்புபடம்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து

Published On 2021-06-18 14:20 GMT   |   Update On 2021-06-18 14:20 GMT
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் 5 நாட்களும் மழை குறுக்கீடு இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
சவுத்தம்டன்:

முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்க இருந்த ஆட்டத்தில் வானிலை மோசமாக இருந்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதல் ஏற்பட்டது. 

போட்டி நடைபெறும் 5 நாட்களும் மழை குறுக்கீடு இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி இன்று போட்டி துவங்குவதற்கு முன்பாகவே மழை பெய்யத் தொடங்கியது. 

மழை தொடர்ந்து பெய்து வருவதால் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News