செய்திகள்
விராட் கோலி, கேன் வில்லியம்சன்

நெருப்பு- ஐஸ் ஆகியவற்றுடன் விராட் கோலி- கேன் வில்லியம்சனை ஒப்பிடும் தினேஷ் கார்த்திக்

Published On 2021-06-17 13:00 GMT   |   Update On 2021-06-17 13:00 GMT
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சனின் சிரிப்பு வெல்லுமா? விராட் கோலியின் ஆக்ரோசம் வெல்லுமா?
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணியை விராட் கோலி வழி நடத்துகிறார். நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் வழி நடத்துகிறார். விராட் கோலி ஆக்ரோசமானவர். கேன் வில்லியம்சன் சாந்தமானவர். இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள்.

எந்தவொரு சூழ்நிலையிலும் கேன் வில்லியம்சன் டென்சன் ஆகமாட்டார். சிரித்துக் கொண்டே இருப்பார். ஆனால் போட்டி வெற்றித் தோல்வியை யூகிக்க முடியாமல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது விராட் கோலி முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. முகத்தில் தீப்பொறியை காணலாம். இந்த நிலையில் இருவரையும் நெருப்பு- ஐஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.



இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘இருவரையும் ஒப்பிட நெருப்பு- ஐஸ் ஆகிய சிறந்ததாக இருக்கும். விராட் கோலி நெருப்பை சுவாசிக்கிறார். கேன் வில்லியம்சனை எடுத்துக்கொண்டால் கூல் எனலாம். ஒரு ஓவருக்கு 32 ரன்கள் வேண்டும் என்ற நிலையிலும் கேன் வில்லியம்சன் சிரித்துக் கொண்டே, அதை எளிதாக எடுத்துக் கொள்வார்.



ஆனால் அதே சூழ்நிலையில் விராட் கோலியை எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒரு தவறு செய்து, அவுட்டாகி செல்லும்போது, அவர் உங்களை நோக்கி சொற்களை வீசுவார். இது அனுபவம். இதுதான் அவர்களுடன் விளையாடும்போது அழகானது. அவர்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். ஆனால், இவருவரம் வெவ்வேறு வழியில் விளையாடுகிறார்கள்’’ என்றார்.

ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார்.
Tags:    

Similar News