செய்திகள்
அக்சர் படேல்

கடைசி டெஸ்ட் போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் - அக்சர் பட்டேல் விருப்பம்

Published On 2021-02-26 10:28 GMT   |   Update On 2021-02-26 10:28 GMT
கடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் என அக்சர் பட்டேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட் டேல் கூறியதாவது:-

பந்து வீச்சில் இந்த செயல்பாட்டை தொடர விரும்புகிறேன். நான் பேட்டிங்கில் பங்களிப்பை அளிக்காமல் இருக்கும் போது பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விக்கெட் வீழ்த்துவதே எனது பலம்.

இந்த ஆடுகளம் கடைசி டெஸ்ட் போட்டிக்கு அதே போன்று இருக்க வேண்டும். அதேபோல் நான் விக்கெட்டுகளையும் எடுக்க விரும்புகிறேன் என்றார்.

Tags:    

Similar News