செய்திகள்
அக்சார் பட்டேல்

2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா?

Published On 2021-02-25 13:33 GMT   |   Update On 2021-02-25 13:33 GMT
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக்  லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.



அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News