செய்திகள்
கோப்புப்படம்

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை - கேரளா ஆட்டம் டிரா

Published On 2021-02-21 18:37 GMT   |   Update On 2021-02-21 18:37 GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கோவா:

11 அணிகள் இடையிலான 7-வது இ்ந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 101-வது லீக் ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தியது. கோவா அணியில் இகோர் அங்குலோ (20-வது நிமிடம்), ரிடீம் (23-வது நிமிடம்) கோல் அடித்தனர். 19-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 9 டிரா, 3 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருப்பதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அதே சமயம் 7-வது தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

இரவில் நடந்த சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தனது கடைசி லீக்கில் ஆடிய முன்னாள் சாம்பியனான சென்னை அணி 3 வெற்றி, 11 டிரா, 6 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- ஏ.டி.கே. மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News