செய்திகள்
தமிழ்நாடு கிரிக்கெட் அணி (கோப்புப்படம்)

சையது முஷ்டாக் அலி டிராபி டி20: அரையிறுதியில் தமிழ்நாடு- ராஜஸ்தான், பஞ்சாப்- பரோடா பலப்பரீட்சை

Published On 2021-01-28 10:07 GMT   |   Update On 2021-01-28 10:07 GMT
சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் அரையிறுதியில் தமிழ்நாடு- ராஜஸ்தான், பஞ்சாப்- பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், ஹரியானா, பரோடா, பீகார், ராஜஸ்தான் அணிகள் முன்னேறின.

காலிறுதியில் பஞ்சாப் கர்நாடகத்தையும், தமிழ்நாடு இமாச்சல பிரதேச அணியையும், ஹரியானாவை பரோடாவும், பீகாரை ராஜஸ்தானும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன. முதலில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகளும், 2-வது நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் - பரோடா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வருகிற 31-ந்தேதி இறுதி போட்டி நடக்கிறது. இந்த போட்டிகள்  அனைத்தும் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடக்கிறது.
Tags:    

Similar News