செய்திகள்
ரொனால்டோ

போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ கொரோனாவால் பாதிப்பு

Published On 2020-10-13 19:52 GMT   |   Update On 2020-10-13 19:52 GMT
போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
லிஸ்பன்:

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், உலகின் சிறந்த வீரர் விருதை 5 முறை வென்றவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ நேஷன்ஸ் லீக் போட்டியில் விளையாடி வந்தார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் 35 வயதான ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் ரொனால்டோ தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்து இருக்கும் போர்ச்சுக்கல் கால்பந்து சங்கம் இன்று நடைபெறும் சுவீடனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் என்று கூறியுள்ளது. யுவென்டஸ் கிளப் (இத்தாலி) அணிக்காகவும் விளையாடி வரும் ரொனால்டோ அடுத்து வரும் அந்த அணியின் லீக் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.
Tags:    

Similar News