செய்திகள்
ரோகித் சர்மா

ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

Published On 2020-10-01 17:07 GMT   |   Update On 2020-10-01 17:07 GMT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக அரைசதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா சுரேஷ் ரெய்னாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஐ.பி.எல். தொடரில் 5,000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 3-வது வீரராக, தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

மேலும், இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் சாதனைப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா 38 அரைசதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது ரோகித் சர்மா அவருடன் இணைந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் 44 அரைசதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

இன்றைய போட்டியில் 45 பந்தில் 70 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News