செய்திகள்
ரோகித் சர்மா

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்து ஹிட்மேன் சாதனை

Published On 2020-10-01 15:34 GMT   |   Update On 2020-10-01 15:34 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குப்பின் 5 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனைப் படைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 2 ரன்கள் அடித்தால் 5 ரன்கள் என்ற இலக்கை எட்டுவார் என்ற நிலையில், பவுண்டரி அடித்து இலக்கை எட்டினார்.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி 5,430 ரன்களுடனும் முதல் இடத்திலும், 5,368 ரன்களுடனும் சுரேஷ் ரெய்னா 2-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த போட்டியில் ரோகித் சர்மா 45 பந்தில 70 ரன்கள் விளாசினார்.
Tags:    

Similar News