செய்திகள்
விராட் கோலி, டி வில்லியர்ஸ்

2016-க்குப்பிறகு ஐபிஎல் சீசன் தொடக்க ஆட்டத்தில் வெற்றியை ருசித்த ஆர்சிபி

Published On 2020-09-22 06:01 GMT   |   Update On 2020-09-22 06:01 GMT
துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சாஹலின் அபார பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி.
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் விளையாடிய ஆர்.சி.பி. 163 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆர்.சி.பி. 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 32 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2016 சீசனுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றியை ருசித்துள்ளது.

ஆர்.சி.பி. அணியின் வெற்றிக்கு இளம் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் பேட்டிங்கும் சாஹல், நவ்தீப் சைனியின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.
Tags:    

Similar News