செய்திகள்
மனைவியுடன் ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விரைவில் தந்தையாகிறார்

Published On 2020-06-01 10:20 GMT   |   Update On 2020-06-01 10:20 GMT
எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவருக்கும் செர்பியாவில் பிறந்த மாடல் அழகி நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு நிச்சய தார்த்தம் நடந்தது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தபோது, ஹர்திங் பாண்ட்யா- நடாஷா ஜோடி மும்பையில் உள்ள வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடாஷா கர்ப்பமாக இருப்பதால், ஹர்திக் பாண்ட்யா விரைவில் தந்தையாகிறார். இதை அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நானும், நடா‌ஷவும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது இன்னும் சிறப்பாக அமையவுள்ளது. எங்கள் வாழ்வில் புது உறவை வரவேற்க தயாராக இருக்கிறோம். உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் புதிய பரிணாமத்திற்கு செல்ல காத்திருக்கிறோம்.

இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

விரைவில் தந்தையாக இருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முகமது ‌ஷமி, சாஹல், மயங்க் அகர்வால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News