செய்திகள்
இந்தியா ஓபன் பேட்மிண்டன்

டெல்லியில் டிசம்பர் மாதம் இந்திய ஓபன்: உலக பேட்மிண்டன் பெடரேசன் அறிவிப்பு

Published On 2020-05-22 11:49 GMT   |   Update On 2020-05-22 11:49 GMT
மார்ச் மாதம் நடைபெற இருந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர், டிசம்பர் மாதம் நடைபெறும் என உலக பேட்மிண்டன் பெடரேசன் தெரிவித்துள்ளது.
உலக டூர் சூப்பர் பேட்மிண்டன் தொடரான இந்தியா ஓபன் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை டெல்லியில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 8-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை இந்தத் தெடர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் பெடரேசன் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தொடர்களில் ஒன்றாக இந்திய ஓபன் கருதப்படுகிறது. ஐதராபாத் ஓபன் ஆகஸ்ட் 11-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரையும், சையத் மோடி சர்வதேச ஓபன் நவம்பர் 17-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நியூசிலாந்து ஓபன், இந்தோனேசியா ஓபன், மலேசியாக ஓபன், தாய்லாந்து ஓபன் மற்றும் சீனாவில் நடைபெற இருந்த உலக டூர் பைனல்ஸ் ஆகியவற்றின் தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News