செய்திகள்
சச்சின் தீவிர ரசிகர் சுதிர் கவுதம்

மைதானத்தில் தனி ஒருவனாக இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிப்பேன்: சச்சினின் தீவிர ரசிகர் சொல்கிறார்

Published On 2020-05-19 09:15 GMT   |   Update On 2020-05-19 09:15 GMT
சச்சின் தெண்டுல்கர் மூலம் பிசிசிஐ-யின் அனுமதி பெற்று தனி ஒருவனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று சுதிர் கவுதம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குப் பிறகு சில நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் இன்றி வெறிச்சோடி மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளும் இப்படித்தான் நடக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதம் மைதானத்தில் இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தி ரசிகர்களுக்கு மத்தியில் நின்று வீரர்களை உற்சாகப்படுத்துவார்.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்ற சூழ்நிலை வரும்போது சுதிர் கவுதமால் மைதானத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆனால் சச்சின் தெண்டுல்கர் உதவியுடன் மைதானத்திற்குச் செல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து சுதிர் கவுதம் கூறுகையில் ‘‘போட்டி மீண்டும் நடைபெறும்போது, நான் நிச்சயம் அங்கு செல்வேன். அங்கு என்னை அனுமதிக்காமல் கூட இருக்கலாம். நான் சச்சின் தெண்டுல்கர் அவர்களை தொடர்பு கொள்வேன். அவர் எனக்கு பிசிசிஐ-மூலம் அனுமதி பெற்றுத்தருவார். நான் ஸ்டேயத்தில் இருக்கும்போது நான் உற்சாகப்படுத்துபவர்களின் தலைவராக இருப்பேன்’’ என்றார்.
Tags:    

Similar News