செய்திகள்
குத்துச்சண்டை

சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்: சர்வதேச குத்துச்சண்டை சங்கம் எச்சரிக்கை

Published On 2020-05-14 19:48 IST   |   Update On 2020-05-14 19:48:00 IST
இந்திய குத்துச்சண்டை பெடரேசன் மே 20-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தாவிடில் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றிருந்தது. போட்டியை நடத்துவதற்கான கட்டணத்தை (4 லட்சம் அமெரி்க்க டாலர்) இந்திய குத்துச்சண்டை பெடரேசன் செலுத்த தவறியதால் தொடரை வேறு நாட்டிற்கு மாற்றியது. மேலும் அபராதமும் விதித்தது.

இதற்கிடையில் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடத்தப்பட்ட சாம்பியன்ஷிப் தொடருக்கான தொகையில் 3,60,000 அமெரிக்க டாலர் பாக்கி வைத்துள்ளது. இவற்றை தவணை முறையில் வசூலிக்க முடிவு செய்தது.

அதன்படி மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான தவணை தொகை 1,20,000 டாலர் மே 20-ந்தேதிக்குள் கட்ட வேண்டும். முழு பிரச்சினைக்கும் ஒரு இணக்கமான தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று இந்திய குத்துச்சண்டை பெடரேசன் தெரிவித்துள்ளது.

இந்த பணத்தை கட்ட தவறினால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருக்கும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்ததுள்ளது.

Similar News