செய்திகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Published On 2020-05-06 09:40 GMT   |   Update On 2020-05-06 09:40 GMT
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்கள் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணியின் உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த 2015-ல் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஒரு அணிகளில் ஒன்றான டிரினாட் அணியை வாங்கியது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு நூறு பந்து கிரிக்கெட் தொடரை (The Hundred) நடத்த இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் தொடர் நடைபெறவில்லை. அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் முதலீட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது 300 மில்லியன் பவுண்டுகள் இழப்பை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் தனது கொள்கையில் மாற்றம் கொண்டு வர இருக்கிறது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
Tags:    

Similar News