செய்திகள்
மெஹ்முதுல்லா, தமிம் இக்பால்

ஐபிஎல் தொடரில் விளையாட மெஹ்முதுல்லா தகுதியானவர்: தமிம் இக்பால் சொல்கிறார்

Published On 2020-05-05 17:08 IST   |   Update On 2020-05-05 17:08:00 IST
உலகின் தலைசிறந்த டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற மெஹ்முதுல்லா தகுதியானவர் என தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
உலகளவில் நடைபெறும் டி20 லீக்கில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர்தான் தலைசிறந்ததாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு அணிகளும் வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குகிறது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.

வங்காளதேச அணியின் மோர்தசா, அப்துர் ரசாக், முகமது அஷ்ரபுல், ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால், முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். இதில் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

வங்காள தேசம் டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டன் மெஹ்முதுல்லா சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மெஹ்முதுல்லா ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தகுதியானவர் என தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அணிகள் ஏலம் எடுக்க மெஹ்முதுல்லா தகுதியானவர். குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த மூன்று நான்கு வருடங்களாக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்காதது துரதிருஷ்டவசமானது’’ என்றார்.

Similar News