செய்திகள்
கேஎல் ராகுல், தீப் தாஸ்குப்தா

டி20-யில் கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும்: தீப் தாஸ்குப்தா சொல்கிறார்

Published On 2020-05-05 11:07 GMT   |   Update On 2020-05-05 11:07 GMT
இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணிக்கு கேஎல் ராகுலை கீப்பராக தேர்வு செய்யலாம் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் எம்எஸ் டோனி விளையாடாமல் உள்ளார். இதனால் ரிஷப் பண்ட்-ஐ அடுத்த விக்கெட் கீப்பராக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தயார்படுத்தி வருகிறது.

அவருக்கு போதுமான அளவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டார். இதனால் இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக சேர்த்தது.

கேஎல் ராகுல் பேட்டிங் செய்ததுடன் விக்கெட் கீப்பர் பணியையும் சிறப்பாக செய்தார். இதனால் நியூசிலாந்து தொடரிலும் விக்கெட் கீப்பராக பணியாற்றினார்.

இந்நிலையில் டி20 அணிக்கு கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக நியமிக்கலாம் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தீப் தாஸ்குப்தா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரைக்கும் கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக பணியாற்ற வேண்டும். எப்படி கீப்பிங் செய்ய வேண்டும், பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளார். அவர் முறையான விக்கெட் கீப்பர். அவரிடம் டெக்னிக்கல் திறமையும் உள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News