செய்திகள்
சோயிப் அக்தர்

இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளர்?: சோயிப் அக்தரின் பதில்

Published On 2020-05-05 10:02 GMT   |   Update On 2020-05-05 10:02 GMT
நான் கற்றுக்கொண்ட கிரிக்கெட் அறிவை பரப்ப வேண்டும் என்பதே எனது நோக்கம் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் வேலையில், இந்திய கிரிக்கெட் மீது அவருக்கு மதிப்பு உண்டு.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்று சோயிப் அக்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சோயிப் அக்தர் பதில் அளிக்கையில் ‘‘நிச்சயமாக நான் பணிபுரிவேன். என்னுடைய வேலை அறிவை பரப்புவதுதான். நான் கிரிக்கெட் குறித்து கற்றுக்கொண்ட அறிவை மற்றவர்களுக்கு பரப்புவேன். நான் ஆக்ரோசமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன்’’ என்றார்.
Tags:    

Similar News