செய்திகள்
எம்எஸ் டோனி, ரோகித் சர்மா

போட்டி தள்ளிவைப்பு அல்லது ரசிகர்கள் இல்லாமல் ஆட்டம்: மராட்டிய அரசு திட்டவட்டம்

Published On 2020-03-12 10:04 GMT   |   Update On 2020-03-12 10:04 GMT
வான்கடே மைதானத்தில் நடக்கக்கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை இல்லை, இரண்டே வாய்ப்புகள்தான் என்று மராட்டிய அரசு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுவான இடத்தில் அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகலாம் என்று மகாராஷ்டி மாநில மந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார். நேற்று அம்மாநில அரசு ஆலோசனை நடத்தியது. அந்தக்கூட்டத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படமாட்டாது என முடிவு எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆலோசனைக்குப் பிறகு, நாங்கள் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். ஒன்று போட்டியை தள்ளி வைக்க வேண்டும். அல்லது போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அது.  ஆனால் டிக்கெட் விற்பனை செய்யப்பட மாட்டாது என்பது உறுதி’’ என்றார்.

இதனால் வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெறுவது சந்தேகம்தான். அப்படி போட்டி நடைபெற்றால் டிவி ஒளிபரப்பாளர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News