செய்திகள்
ஐ.பி.எல். போட்டி

கொரோனா வைரஸ் பரவுவதால் ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்படுமா? கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு

Published On 2020-03-11 07:07 GMT   |   Update On 2020-03-11 07:37 GMT
கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா? என்பது குறித்து ஒரிரு நாட்களில் பி.சி.சி.ஐ. தனது முடிவை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதிவரை 9 நகரங்களில் நடக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐ.பி.எல். போட்டிகளில் வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் வருவதால் இந்தப் போட்டிக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. ஐ.பி.எல். ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்தில் பெரும் அளவில் திரள்வார்கள். இதனால் கொரோனா பரவுவதை தடுக்க ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.

கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். இந்தப் போட்டியை தள்ளி வைத்து மாற்று தேதியில் நடத்தலாம் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. பொறுத்து இருந்து பார்ப்பது என்று முடிவு செய்துள்ளது.

ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் படேல் இது குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார். பி.சி.சி.ஐ. இது குறித்து விரைவில் முடிவு செய்ய மத்திய அரசின் முடிவை பொறுத்துதான் கிரிக்கெட் வாரியம் இதில் தனது நிலையை தெரிவிக்கும்.

ஐ.பி.எல். போட்டியை டெலிவி‌ஷனில், மொபைலில் பார்ப்பவர்களின் எண் ணிக்கை மிகவும் அதிகம். இதனால் ரசிகர்களே இல்லாமல் போட்டியை நடத்தலாமா? என்ற ஆலோ சனையும் நடத்தப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் போட் டியை நடத்துவது உகந்தது இல்லை என்று சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பணம் கொழிக்கும் இந்தப் போட்டியை தள்ளி வைப்பதால் பி.சி.சி.ஐ.க்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்படும்.

இதனால் கூடுமானவரை திட்டமிட்ட தேதியில் நடத்த விரும்பும். ஆனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒத்துழைக்க மறுத்தால் போட்டியை தள்ளிவைக்க வேண்டிய நிலையே ஏற்படும். 

எப்படி இருந்தாலும் இது குறித்து ஒருரிரு நாட்களில் பி.சி.சி.ஐ. தனது முடிவை தெரிவிக்கும்.
Tags:    

Similar News