செய்திகள்
வங்காளதேசம் ஒருநாள் அணி கேப்டனாக தமிம் இக்பால் நியமனம்
மோர்தசா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தமிம் இக்பால் வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மோர்தசா. இவர் ஜிம்பாப்வே தொடருடன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அறிவித்திருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட ஜிம்பாப்வே தொடர் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று தமிம் இக்பால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மோர்தசா தலைமையில் வங்காளதேசம் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 வெற்றிகளை பெற்றுள்ளது.
30 வயதாகும் தமிம் இக்பால் 207 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7202 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தமிம் இக்பால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மோர்தசா தலைமையில் வங்காளதேசம் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 வெற்றிகளை பெற்றுள்ளது.
30 வயதாகும் தமிம் இக்பால் 207 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7202 ரன்கள் குவித்துள்ளார்.