செய்திகள்
ஆண்டி பிளவர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமனம்

Published On 2020-03-08 19:10 IST   |   Update On 2020-03-08 19:10:00 IST
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஆண்டி பிளவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் எட்டு அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துணைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக அனில் கும்ப்ளே உள்ளார். சுனில் ஜோஷி இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் வாசிம் ஜாபர், லாங்க்வெல்த், ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் முறையே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக உள்ளனர்.

Similar News