செய்திகள்
வில்வித்தை போட்டி

ஆசிய வில்வித்தை போட்டியில் இருந்து இந்திய அணி விலகல்

Published On 2020-03-06 04:58 GMT   |   Update On 2020-03-06 04:58 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை போட்டியில் இருந்து இந்திய அணி விலகி இருக்கிறது.
கொல்கத்தா:

ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி (நிலை 1) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய வில்வித்தை அணி நாளை புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அறிவுறுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை போட்டியில் இருந்து இந்திய அணி நேற்று விலகி இருக்கிறது. இது குறித்து உலக வில்வித்தை சங்கத்துக்கு, இந்திய வில்வித்தை சங்கம் கடிதம் மூலம் தனது விலகல் முடிவை தெரிவித்து இருக்கிறது. அதில் இந்திய அணி வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடினமான இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News