செய்திகள்
விராட் கோலி

‘இந்திய வீராங்கனைகளால் பெருமிதம்’ - கோலி

Published On 2020-03-06 04:13 GMT   |   Update On 2020-03-06 04:13 GMT
‘இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’ என்று இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணிக்கு இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இறுதிப்போட்டியிலும் சாதிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசு இது. இந்த ஞாயிற்றுக்கிழமை மகுடம் சூடுவதற்கு வாழ்த்துகள்’ என்றார்.

விராட் கோலியின் மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா டுவிட்டர் பக்கத்தில், ‘மிகச்சிறந்த ஆட்டத்தை பார்க்க உற்சாகமாக இருந்த நிலையில் மழை புகுந்து பாழ்படுத்தி விட்டது. அடுத்து 8-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

Tags:    

Similar News