செய்திகள்
ரொனால்டினோ

போலி பாஸ்போர்ட் உடன் பராகுவேயில் சிக்கிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ

Published On 2020-03-05 19:40 IST   |   Update On 2020-03-05 19:40:00 IST
பிரேசில் கால்பந்து அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பராகுவே போலீசார் பிடியில் சிக்கியுள்ளார்.
பிரேசில் கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. 39 வயதாகும் இவர் தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பராகுவே சென்றுள்ளார். அங்கு தனது சகோதரருடன் ஆசுன்சியோனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அப்போது போலீசார் அவரிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ரொனால்டினோ பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடியும்வரை ஹோட்டலில் இருந்து வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

போலீசார் அவரது பாஸ்போர்ட்-ஐ பரிசோதனை செய்ததில் அது போலி எனத் தெரியவந்துள்ளது.  பாஸ்போர்ட்டில் ரொனால்டினோ டி ஆஸ்சிஸ் மொரைரா எனக் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் 7-ந்தேதி பாஸ்பார்ட் வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பிரேசில் இருந்து பிரேசில் அணிக்காக விளையாடி உலக புகழ் பெற்றவர். ஆனால், பராகுவே சொந்த நாடு எனத் தெரிவித்துள்ளார்.

Similar News