செய்திகள்
உனத்கட், புஜாரா

ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடுகிறார் புஜாரா

Published On 2020-03-05 18:59 IST   |   Update On 2020-03-05 18:59:00 IST
ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் பெங்கால் அணிக்கெதிராக புஜாரா விளையாடுவார் என்று சவுராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட் தெரிவித்துள்ளார்.
ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் பெங்கால் - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி வருகிற 9-ந்தேதி நடக்கிறது. இந்திய அணிக்காக விளையாடும் புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடக் கூடியவர்கள். அதேபோல் விக்கெட் கீப்பர் சகா பெங்கால் அணிக்காக விளையாடக் கூடியவர்.

நியூசிலாந்து தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி தாயகம் திரும்பிவிட்டது. புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடினால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என சவுராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து புஜாராவிடம் பேசியதாக கூறும் உனத்கட், இறுதி போட்டியில் விளையாட புஜாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் புஜாரா ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் விளையாடுகிறார். ஆனால் ஜடேஜா விளையாடுவது குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை என்றார்.

பெங்கால் அணியில் சகா விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Similar News