செய்திகள்
பெண்கள் டி20 உலக கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
வாழ்வா? சாவா? போட்டியில் நியூசிலாந்தை நான்கு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலக கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய பெண்கள் அணி.
பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் நெருக்கடிக்கு உள்ளாகின.
இரண்டு அணிகளும் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணியே, காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இன்று மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர்.
அலிசா ஹீலி, பெத் மூனே ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். ஹீலி 9 ரன்னில் ஆட்டமிழந்நதார். ஆனால் பெத் மூனே சிறப்பாக விளையாடி 50 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார். கேப்டன் லானிங் 21 ரன்களும், கார்ட்னர் 20 ரன்களும், பெர்ரி 21 ரன்களும், ஹெய்னஸ் 8 பந்தில் 19 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது.
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ரசெல் பிரிஸ்ட், கேப்டன் ஷோபி டெவைன் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். பிரிஸ்ட் 15 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். ஷோபி டெவைன் 36 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த பேட்ஸ் 14 ரன்னிலும், கிரீன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் கேத்தே மார்ட்டின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து இலக்கை நோக்கிச் சென்றது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. முதல் நான்கு பந்துகளை கார்ட்னர் சிறப்பாக வீசினார். கடைசி இரண்டு பந்துகளில் மார்ட்டின் 10 ரன்கள் அடித்தார். என்றாலும் நியூசிலாந்து அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா பரபரப்பான ஆட்டத்தில் நான்கு ரன்னில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
கேத்தே மார்ட்டின் ஆட்டமிழக்காமல் 18 பந்தில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 37 ரன்கள் குவித்தும் பலனில்லாமல் போனது.
இரண்டு அணிகளும் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணியே, காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இன்று மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர்.
அலிசா ஹீலி, பெத் மூனே ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். ஹீலி 9 ரன்னில் ஆட்டமிழந்நதார். ஆனால் பெத் மூனே சிறப்பாக விளையாடி 50 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார். கேப்டன் லானிங் 21 ரன்களும், கார்ட்னர் 20 ரன்களும், பெர்ரி 21 ரன்களும், ஹெய்னஸ் 8 பந்தில் 19 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது.
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ரசெல் பிரிஸ்ட், கேப்டன் ஷோபி டெவைன் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். பிரிஸ்ட் 15 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். ஷோபி டெவைன் 36 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த பேட்ஸ் 14 ரன்னிலும், கிரீன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் கேத்தே மார்ட்டின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து இலக்கை நோக்கிச் சென்றது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. முதல் நான்கு பந்துகளை கார்ட்னர் சிறப்பாக வீசினார். கடைசி இரண்டு பந்துகளில் மார்ட்டின் 10 ரன்கள் அடித்தார். என்றாலும் நியூசிலாந்து அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா பரபரப்பான ஆட்டத்தில் நான்கு ரன்னில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
கேத்தே மார்ட்டின் ஆட்டமிழக்காமல் 18 பந்தில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 37 ரன்கள் குவித்தும் பலனில்லாமல் போனது.