செய்திகள்
கங்குலி

கொரோனா வைரஸ் பீதி: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்தார் கங்குலி

Published On 2020-03-01 16:32 GMT   |   Update On 2020-03-01 16:32 GMT
துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் நாளைமறுநாள் துபாயில் நடக்க இருக்கும் கூட்டத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி புறக்கணித்துள்ளார்.
துபாயில் வருகிற 3-ந்தேதி (நாளைமறுநாள்) ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. இருவரும் இன்று புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

தற்போது துபாயிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்த விரும்புகிறது. ஆனால் இந்திய அணி அங்கு செல்ல சாத்தியமில்லை. போட்டியை துபாயில் நடத்த வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News