செய்திகள்
வங்காளதேசம் அணி வீரர்கள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை 169 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்

Published On 2020-03-01 20:00 IST   |   Update On 2020-03-01 20:00:00 IST
சிலெட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேயை 169 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்.
வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிலெட்டில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் லிட்டோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தமிம் இக்பால் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 29 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி 126 ரன்கள் குவித்தார். முகமது மிதுன் 41 பந்தில் 50 ரன்களும், ஷாய்ஃபுதின் 15 பந்தில் 28 ரன்களும் அடிக்க வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.

பின்னர் 322 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. வங்காளதேசம் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே 152 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி சார்பில் ஷாய்ஃபுதின் 3 விக்கெட்டும் மோர்தசா மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News