செய்திகள்
ரபடா

இந்திய தொடரில் இருந்து ரபடா விலகல்: ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா?

Published On 2020-03-01 08:50 GMT   |   Update On 2020-03-01 08:50 GMT
ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த ரபாடா காயம் காரணமாக இந்தியா தொடரிலும் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது இடுப்பு பகுதியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபடா, இந்தியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் (மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை) இருந்து விலகியிருக்கிறார்.

இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் என்று தென்ஆப்பிரிக்க மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே வருகிற 29-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடருக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரபடா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
Tags:    

Similar News