செய்திகள்
ரிஷ்ப் பந்த்

இந்தியா மீண்டும் சொதப்பல் பேட்டிங்...நியூசிலாந்து வெற்றிபெற வெறும் 9 ரன்கள் இலக்கு

Published On 2020-02-24 05:32 IST   |   Update On 2020-02-24 05:38:00 IST
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன்: 

நியூசிலாந்து-இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது. 

இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

 பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் சவுதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் நியூசிலாந்து அணி வெறும் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுலபமான இலக்கை எளிதில் அடைந்து நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar News