செய்திகள்
ஷர்துல் தாகூர்

என்னுடைய நேர்மறை மற்றும் பேரார்வம் இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவும்: ஷர்துல் தாகூர்

Published On 2020-02-17 13:26 GMT   |   Update On 2020-02-17 13:26 GMT
தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்வேன், என்னுடைய பேரார்வம் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இடம் பிடித்திருந்தார். இவர் அதிக அளவில் ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ஒருநாள் போட்டியில் இவருக்கு இடம் கொடுத்தது யார்?, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு இவர் தேவைதானா? என்று கிரிக்கெட் ரசிகர்கள் கொதித்தனர்.

இந்நிலையில் நேர்மறை மற்றும் பேரார்வம் ஆகியவற்றின் மூலம் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியும் என ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘உறுதியாக நான் உலக கோப்பை மீது கண் வைத்துள்ளேன். நேர்மறை சிந்தனையுடன் போட்டியில் விளையாடுவதால், அதிக தன்னம்பிக்கை பெற்றுள்ளேன். போட்டி மீதான பேரார்வம் உலக கோப்பையை அணி வெல்வதற்கு, அல்லது என்னுடைய வேலை சிறப்பாக அமைய உதவும்.

ஐபிஎல் தொடர் முக்கியமானது. ஐபிஎல் தொடரில் இருந்து உத்வேகத்தை பெற முடியும். அந்த உத்வேகத்தை அப்படியே உலக கோப்பைக்கு கொண்டு செல்வது அவசியம். அதன்பின் இலங்கை தொடர் இருக்கிறது. ஜிம்பாப்வேவுக்கு செல்கிறோம். அப்புறம் ஆசிய கோப்பை டி20 தொடர் இருக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News