செய்திகள்
மழையால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் கைவிடப்பட்டது

பெண்கள் டி20 உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது

Published On 2020-02-17 08:21 GMT   |   Update On 2020-02-17 08:21 GMT
பெண்கள் டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
பெண்களுக்கான டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் பீல்டு மைதானத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் பிரிஸ்பேனில் கனமழை பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா நாளை கடைசி பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இது உலக கோப்பையின் தொடக்க போட்டியாகும்.
Tags:    

Similar News