செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா தொடர்: ரசிகர்களுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அன்பான வேண்டுகோள்

Published On 2020-02-16 11:08 GMT   |   Update On 2020-02-16 11:08 GMT
ஆஸ்திரேலியா அணி நம் மண்ணில் விளையாடும்போது ஸ்மித், வார்னருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இந்தத் தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது.

இதில் டேவிட் வார்னர், ஸ்மித் விளையாட இருக்கிறார்கள். போட்டியின்போது இருவரையும் ரசிகர்கள் கிண்டல் செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என ரசிகர்களுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2018 கேப் டவுன் டெஸ்டின் போது வார்னரின் மனைவியை கிண்டல் செய்ததுதான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
Tags:    

Similar News