செய்திகள்
கோல் அடித்த வீரரை பாராட்டும் சக வீரர்கள்

ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது

Published On 2020-02-13 16:35 GMT   |   Update On 2020-02-13 16:35 GMT
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
ஐதராபாத்:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஐதராபாத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. ஜாம்ஷெட்புர் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 39-வது நிமிடத்தில் ஐதராபாத் அணி முதல் கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என ஐதராபாத் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் இறுதியில் 93-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்தது.

இறுதியில், ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
Tags:    

Similar News