செய்திகள்
கோப்பையுடன் ஜிரி வெஸ்லி

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ்- செக் குடியரசு வீரர் ‘சாம்பியன்’

Published On 2020-02-10 05:11 GMT   |   Update On 2020-02-10 05:11 GMT
மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி பெலாரஸ் வீரர் இகோர் ஜெராசிமோவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
புனே:

3-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7-6 (7-2), 5-7, 6-3 என்ற செட் கணக்கில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். 26 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவரது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.

தரவரிசையில் 107-வது இடம் வகிக்கும் 26 வயதான வெஸ்லிக்கு இது 2-வது சர்வதேச பட்டமாகும். அவருக்கு ரூ.65 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
Tags:    

Similar News